என்னில்
ஒரு பெருதுளியை
தனக்கென எடுத்துக்கொண்டாய்
உரிமையில்லாத போதும்
உன்னை
பறித்துக்கொண்டவள் நான்
ஒரு
கோவப்பெருந்தீயில்
சிவனாய் மாறி என்னை
சுட்டுப்பொசுக்கி
சாம்பலை இதயத்துக்கு பூசி
வெற்றியில் களித்தவன்
நீ
காதலை கேட்டேன்
சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்
என்றாய்
ஒர் எழுத்தில்
உன்
உறவை சொல்லி....!
Tuesday 14 August 2012
Wednesday 8 August 2012
சேமிப்பும் செலவும்!!!
என்னிடமிருக்கும்
சேமிப்பை கணக்கிடலானேன்
அடைமொழி
அத்து மீறல்
முத்தம்
சண்டை
கோவம்
மெளனம்
கெஞ்சல்
மெனக்கெடல்
புன்னகை
கண்ணீர்
காத்திருப்பு
கவிதை
ஆசை
உன்
பார்வையின் மொழி
கொஞ்சம் செல்லமும் சில்மிஷமும்
சினுங்கல்
போதுமென்று நினைக்கிறேன்
உனக்காக செலவிட..
சொல்ல மறந்தேன்
இதழின் கடையேரம்
என்
உயிரின் துளியை ஒளித்து வைத்திருக்கேன்
நீ போகும் போது
செலவு செய்துக்கொள்!!
சேமிப்பை கணக்கிடலானேன்
அடைமொழி
அத்து மீறல்
முத்தம்
சண்டை
கோவம்
மெளனம்
கெஞ்சல்
மெனக்கெடல்
புன்னகை
கண்ணீர்
காத்திருப்பு
கவிதை
ஆசை
உன்
பார்வையின் மொழி
கொஞ்சம் செல்லமும் சில்மிஷமும்
சினுங்கல்
போதுமென்று நினைக்கிறேன்
உனக்காக செலவிட..
சொல்ல மறந்தேன்
இதழின் கடையேரம்
என்
உயிரின் துளியை ஒளித்து வைத்திருக்கேன்
நீ போகும் போது
செலவு செய்துக்கொள்!!
Tuesday 7 August 2012
கருணை!!
உனக்கும்
கரிசனம் இருக்கிறது என்பதை காட்ட
என்னை பற்றி நான்கு
வரிகள் மட்டுமே எழுத முடிந்த நீ
என்
பின்னால் நின்று
என்னை வேடிக்கை பார்
படம் எடு
கருணை சிந்து
முடிந்தால் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டு
பரிதாபப்பட்டு
உன்னை மனுஷியாய் காட்டிக்கொள்ளாதே
உனக்கெப்படி
தெரியும் நீ போன பின்
உன்னை போல் நான் ஏன் இருக்க கூடாது என்ற
கனவும் என் முதுகில் சுமையாகுமென்று!!!
Friday 3 August 2012
நீ -11
இந்த
என் காதலேனும் தொலைந்துவிடாமல்
பொத்தி வைக்க இடமின்றி
உன்னிலேயே
உன்னை விட்டு வைக்கிறேன்
எனக்கானவன் நீ
உன்னை என் அனுமதியின்றி
செலவு செய்து விடாதே
கை வசம்
உன் ஒரு புன்னகையை மட்டும்
கொண்டு செல்கிறேன்
நிகழ்காலத்திற்கு
எனக்கது போதும்!!!!!
Wednesday 1 August 2012
எனக்கு தெரியும்........
எனக்கு தெரியும்
உனக்கே உனக்கேயான என் மொழியில்
நீ ஒரு குழந்தை
ஊர்ஜிதப்படுத்திக்கொள்வேன்
என்னை
அழவைக்கும் போதெல்லாம்
எனக்கு தெரியும்
நீ ஒரு தொட்டாச்சிணுங்கி
தொடாது போனாலும் சிணுங்கும்
செல்ல போக்கிரி நீ
அறிந்து கொண்டேன்
நீ முனுமுனுக்கும் போதெல்லாம்
எனக்கு தெரியும்
நீ ஒரு மதுக்கிண்ணம்
பருகி கிரங்கியதிலிருந்து
தெரிந்து கொண்டேன்
நான்
உளறிக்கொண்டிருக்கும் போதெல்லாம்
எனக்கு தெரியும்
நீ ஒரு இம்சை
அன்றாடம் குறைந்துக்கொண்டிருக்கும்
என் ஆயுட்காலம்
சொன்னதில் உணர்ந்துக்கொண்டேன்
உன்
பார்வையால் நான் பரிதவிக்கும் போதெல்லாம்
எனக்கு தெரியும்
நீ ஒரு இத்தியாதி இத்தியாதி இத்தியாதி
எனக்கென்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புரிந்து கொண்டேன்
என்னை கண்ணீர் சிந்த வைத்து
உன் காதலில் நீ வென்ற போதெல்லாம்!!!
உரக்க ஒரு முறை கேட்க ஆசை
ஏண்டா ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?ன்னு
Subscribe to:
Posts (Atom)