Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Tuesday, 29 January 2013

வரம் கேளா தவம்

!
வரமேதும் கேளாத தவம் நின் காதல் என்றும் முன் தோன்றி வரம் தராததென் காதல் நீ தவம் களையவில்லை என்னில் காதல் தோன்றவில்லை தெய்வங்கள் என்னை தேவதையில்லையென்ற போது சக்திகள் யாவும் இழந்து நிற்கதியாய் நான் நின்ற போதும் எனக்காக தவம் களையாமல் நீ உன்னிடம் இதோ வரம் வேண்டி நான்..!

Tuesday, 14 August 2012

சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்

என்னில்
ஒரு பெருதுளியை
தனக்கென எடுத்துக்கொண்டாய்
உரிமையில்லாத போதும்
உன்னை
பறித்துக்கொண்டவள் நான்
ஒரு
கோவப்பெருந்தீயில்
சிவனாய் மாறி என்னை
சுட்டுப்பொசுக்கி
சாம்பலை இதயத்துக்கு பூசி
வெற்றியில் களித்தவன்
நீ
காதலை கேட்டேன்
சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்
என்றாய்
ஒர் எழுத்தில்
உன்
உறவை சொல்லி....!

Wednesday, 8 August 2012

சேமிப்பும் செலவும்!!!

என்னிடமிருக்கும்
சேமிப்பை கணக்கிடலானேன்
அடைமொழி
அத்து மீறல்
முத்தம்
சண்டை
கோவம்
மெளனம்
கெஞ்சல்
மெனக்கெடல்
புன்னகை
கண்ணீர்
காத்திருப்பு
கவிதை
ஆசை
உன்
பார்வையின் மொழி
கொஞ்சம் செல்லமும் சில்மிஷமும்
சினுங்கல்
போதுமென்று நினைக்கிறேன்
உனக்காக செலவிட..
சொல்ல மறந்தேன்
இதழின் கடையேரம்
என்
உயிரின் துளியை ஒளித்து வைத்திருக்கேன்
நீ போகும் போது
செலவு செய்துக்கொள்!!

Friday, 3 August 2012

நீ -11





இந்த
என் காதலேனும் தொலைந்துவிடாமல்
பொத்தி வைக்க இடமின்றி
உன்னிலேயே
உன்னை விட்டு வைக்கிறேன்
எனக்கானவன் நீ
உன்னை என் அனுமதியின்றி
செலவு செய்து விடாதே
கை வசம்
உன் ஒரு புன்னகையை மட்டும்
கொண்டு செல்கிறேன்
நிகழ்காலத்திற்கு
எனக்கது போதும்!!!!!

Wednesday, 1 August 2012

எனக்கு தெரியும்........





எனக்கு தெரியும்
உனக்கே உனக்கேயான என் மொழியில்
நீ ஒரு குழந்தை
ஊர்ஜிதப்படுத்திக்கொள்வேன்
என்னை
அழவைக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு தொட்டாச்சிணுங்கி
தொடாது போனாலும் சிணுங்கும்
செல்ல போக்கிரி நீ
அறிந்து கொண்டேன்
நீ முனுமுனுக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு மதுக்கிண்ணம்
பருகி கிரங்கியதிலிருந்து
தெரிந்து கொண்டேன்
நான்
உளறிக்கொண்டிருக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு இம்சை
அன்றாடம் குறைந்துக்கொண்டிருக்கும்
என் ஆயுட்காலம்
சொன்னதில் உணர்ந்துக்கொண்டேன்
உன்
பார்வையால் நான் பரிதவிக்கும் போதெல்லாம்

எனக்கு தெரியும்
நீ ஒரு இத்தியாதி இத்தியாதி இத்தியாதி
எனக்கென்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புரிந்து கொண்டேன்
என்னை கண்ணீர் சிந்த வைத்து
உன் காதலில் நீ வென்ற போதெல்லாம்!!!

உரக்க ஒரு முறை கேட்க ஆசை
ஏண்டா ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?ன்னு

Wednesday, 25 July 2012

காதல் பிரம்மாக்கள்




அந்த பெருவிழியில் வீற்றிருக்கிறது
என் பிம்பம்
ஓய்யாரமாய்,ஆங்காரமாய் மிக அலட்சியமாயும்
என் பார்வையின் கரிசனத்தில் தான்
அவன் கடந்து கொண்டிருக்கிறான் பாதைகளை
நான் சேகரித்தும் நிராகரித்தும் கொண்டிருக்கிறேன்
அவன் பார்வைக்கான ஊடுறுவல்களை
அதை அப்படியே ஆமோதிக்க அவனும்
பழகிக்கொண்டிருக்கிறான்
இருவரின் பார்வைக்கும் பிடித்தவைகளை மட்டும்
நானும் அவனும் கவிதைகளாக்குவோம்
அனேக நேரங்களில் அவன் பார்வை
இழந்தவனாக இருக்கவே ப்ரியப்படுகிறான்
அவ்வேளைகளை நாங்கள் இரவுகளாக்கிக்கொள்கிறோம்
கனவுகளுக்கு இங்கு இடமில்லை
நாங்கள் சிற்பிகள், ஓவியர்கள், கவிஞர்கள், கதைச்சொல்லிகள்
எங்களுக்கானவைகளை தோற்றுவித்துக்கொண்டு
நாங்கள் கடவுள் ஆனோம்!!!

Tuesday, 17 July 2012

அவன் வந்த பொழுதுகள்..

இப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் அறிமுகம்
உத்தரவோட உள்ளே வந்தான்!!

அவசர வேலை நிமித்தம்
அங்கிங்கென்று அலைந்துகொண்டிருந்தான்
கூடவே
என்னை அழைத்து வரவேண்டும்
என்ற
கட்டாயமும் அவனுக்கு இருந்தது !!

அப்படியான
ஒரு பொழுதில் தான்
எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது!!

அழுக்காய் இருந்தான்
அது அலைச்சலின் நிமித்தமாய் இருக்கலாம்
அழுக்கான பசங்களை பெண்களுக்கு பிடிக்குமாம்
நேற்று குளிக்காத நண்பன் சொன்னான்..

அப்போது
என் கண்களுக்கு அழகாய் இருந்ததன்
காரணம் புரிந்தது!!

விடைபெறும் போது
விழியிடம் ஏதோ கேட்டு
எதையோ தேடி விழியால் ஏதோ சொன்னான்
அப்போதேதும் விளங்கவில்லை!!

வீடு வந்தேன்
விடைகிடைத்தது

எப்படியோ
ஆன ஒரு பொழுதில்
அபகரித்திருந்தான்
“ அவன் “
என்னை!!!

Wednesday, 13 June 2012

நீ...10

தந்துச்சென்ற
நீயும்
வாங்கி வந்த
நானும்
இப்படியே
இருந்துவிடுவோம்

ஆனால்
துரத்தி வரும் நினைவு
தூபம் போடும் ஆசை
ஆபுத்திரனின் அட்ஷய பாத்திரமாய்
அன்றாடம் சுரக்கும்
ப்ரியத்தை தானமாய் தர
நான் மணிமேகலை
தெய்வமில்லை..

வா
வந்து வாங்கிப்போ
திரும்ப
நீ
எதுவும் தரவேண்டாம்

உன்னால்
உனகாக பிறக்கும்
என்
ப்ரியங்களின் தகப்பன்சாமி
நீ
தான்

Tuesday, 12 June 2012

நீ....9

இன்னும்
நிலா காட்டி சோறுட்ட
அடம்பிடிக்கிறாய்

ஒன்றிரண்டு பருக்கைகள்
மேவாயில் ஓட்டிக்கொள்ள
எனக்கும் பசிக்க
ஆரம்பிக்க

போதுமானதாய் இருக்கிறது
அவ்விரு
பருக்கைகள்...

Monday, 11 June 2012

நீ.....8

இன்னும் குழந்தையாய்
நீ...
இன்னும் குழந்தை தான்
நீ
குழந்தை
நீ
மழலை
நீ....

கருவில்
நீ
என்
திருவிலும்
நீ
நீ
நீ
நீ
நீதாண்டா....
.....................ஏன்
இன்னும்
குழந்தையாய்
நீ?

நீ.....7

ஏதோ
ஒன்றை சொல்ல
ஏதோ ஒன்றை
கேட்க
ஏதோ ஒன்றை
நினைக்க
ஏதோ ஒன்றை
மறக்க
ஏதோ ஒன்றில்
தவிக்க
ஏதோ ஒன்றை
இயக்க
ஏதோ ஒன்றை
பாட
ஏதோ ஒன்றை
இழக்க
ஏதோ ஒன்றை
எழுத
கொஞ்சம் நேரம்
என்னை திரும்பக் கொடு
அந்த
ஏதோ ஒன்றில்
சற்று நேரம் ஒன்ற...

நீ.....6

தட்டு தடுமாறி
நீ
தவறி விழுவதை
பார்க்கும் போதெல்லாம்
வருத்தமாய் தான் உணர்கிறேன்
உன்
பார்வை பறித்த
குற்றவாளியாய்..
ஆனாலும் உனக்கும் ஓர் வாய்ப்பு
கொடுத்தேன்
மரணிக்கச்சொல்லி.

--------------

அன்னைக்கு ஒரு நாள்
அடுத்தொரு நாள்
பிறகொரு நாள்
முந்தின நாளுக்கு முன் நாள்
முந்தின நாள்
நேற்று
இன்று
அன்றாடம் நீ அனுப்பும்
அத்தனை புகைப்படத்திலும்
நீ மெருகேறி தான் இருக்கிறாய்
நான் தான் இன்னும்
நீயாகாமல்

“ தீ “ யாகி

---------------

எப்படியாவது
இன்றேனும் என் கவிதையில்
உன்னை நிறுத்த
எண்ணிக்கொண்டிருக்கையில்
எளிமையாய் எப்போதோ
என்னை
கடந்து சென்றுவிட்டிருக்கிறாய் நீ
எப்படி
இதில் யாருக்கு யார்
வேண்டாம்?

----------------

Sunday, 10 June 2012

இப்படிக்கு காதல்....................

நிறைய
சொல்லனும்
என்ன சொல்லனும்?
ஏதேதோ சொல்லனும்
என்னன்னு சொல்லனும்?
எல்லாம் சொல்லனும்
என்னென்ன சொல்லனும்?

எப்படி சொல்ல?
எப்படியாவது சொல்
எதை மட்டும் சொல்ல?
எல்லாவற்றையும் சொல்
சொன்னால் என்ன செய்வாய்?
கேட்டால் ஏதாவது செய்வேன்

கேட்டு என்ன செய்வாய்?
கேட்காமல் ஏதும் செய்வேன்
கொடுத்ததை என்ன செய்ய?
கொடுக்காமல் வைத்திரு
ஏதேனும் புரிகிறதா?
எல்லாம் புரிகிறது

பிறகேன் இப்படி
உனக்கு பிறக்கத்தான் அப்படி...

இப்படிக்கு
காதல்....................

நீ.....5

இன்று
ஞாயிற்றுகிழமை இன்னும்
அவன் எழுந்திருக்கவில்லை
சற்றே அதிகம் களைந்திருந்தான்
புறமுதுகு காட்டி உறங்கிகொண்டிருந்தான்
சத்தியமாய்
இதற்கெல்லாம் காரணம் நானில்லை
அருகிருந்து பார்க்கிறேன்
குளிக்காமல்
அழுக்காய் இருந்தாலும்
அழகாய் தான் இருக்கிறான்
உறக்கத்திலும்......

நீ .....4

எந்த
சந்தோஷங்களையும் கொண்டு
சமன் செய்ய முடியவில்லை
நம் ப்ரியங்கள்
வாழும் இடத்தில்..
நம்
நேற்றைய பொழுதை இன்னும்
கொண்டாடிக்கொண்டு 
நான்
புறையோடி நீர் அருந்த
மறந்து நீ.....


---------------------


அச்சம் தவிர்
என
நீ அறிவுறுத்துகையில்
அறிந்திருக்கவில்லை
நான்
நீ
உன்னை 
தவிர்க்க சொல்லி இருக்கிறாய் என்று.


---------------


விடைபெறுகையில்
நெற்றி
கண்
கன்னம்
இதழ் என
நீ
தந்த முத்தங்களை விட
இனிக்கவில்லை 
கலவி...


---------------



முத்தம்

அந்த
ஜீவாலையில்
பொசுங்காத ஓர் முத்தத்தை
இன்னும் 
பொத்தி வைத்திருக்கிறேன்
அடுத்த முறை
தீ மூட்ட!!!


----------------


ஒற்றை 
முத்தம் தான் என் முதலீடு
இன்று 
நான்
அவன் முத்தங்களின் மகா ராணி.


---------------


என்
முத்த 
நெரிச்சலில்
உன்னை காப்பாற்ற
மனமில்லை
இம்முறை
மூச்சு முட்டி இறந்து விடு!!


------------------


ஒளிந்து 
கொள்கிறான் நான்
தேடி வந்து முத்தமிட வேண்டுமாம்
பூச்சாண்டி வருகிறான்
கொடுத்திடுவேன் என்பேன்
முன் வந்து நின்றிடுவான்
ஒளிந்திருந்த கள்வன்.


---------------


மழையில்
அவன் என்னை
முத்தமிடுவதை நான் அனுமதிப்பதில்லை
பின் வரும் நாளில் அது
முத்த பூமியாகிவிடும்!


----------------

நீ - 2

எத்தனை
குறுக்கு வழியும் பாயும்
ஒரு ஊடல்.
அத்தனை
சமாதானங்களையும்
தேடும்
பின் கூடலுக்காய்.


---------------


சின்ன
சின்ன அத்துமீறல்கள்
அடம் பிடித்து
ஓடும் குழந்தையின்
கால் தடங்களாய்..
கடிந்தவாறு
சிணுங்கலும் சிணுங்கியவாறு
இணக்கமும்
இரவு நேரத்து
இணக்கத்தின் குறியீடுகள்.


---------------


தூக்கம்
துறந்த இரவுகளில்
விழியில் வெளிச்சம் போட்டு கனவுகள்
நீர்க்குமிழி 
கனவுகள் உடையும் போது
கசியும் நீரை
கண்ணீர் என்கின்றனர்
என்னில்
உன்னை காணதவர்கள்.


------------------


எந்த
கவிதையும்
என்னுடையது அல்ல
அவை
நீ
தீண்டிய போது
உதிர்ந்த
முத்தங்கள்.


-------------


அது
உன் பெயராகத்தான்
இருக்கக்கூடும்
அதனால் தான்
நான் 
இத்தனை முறை எழுதுகிறேன்.


------

நீ,,,1

நீ
என்ற நீ 
நீயாகவே
எனக்கு 
நீ 
காதலுமில்லை
கவிதையுமில்லை
கோவிலுமில்லை
கடவுளுமில்லை
அத்தை மகனோ
மாமன் மகனோ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
யாரோவாகவே
நண்பனுமில்லை
பகைவனுமில்லை
கட்டியவனா
அய்யோ அறவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நீ
உறவுமில்லை
உயிருமில்லை
இதயமும் இல்லை
காயமோ தழும்போ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நீ என்ற
நீ
வானமோ மழையோ இல்லை
நிலமோ பயிரோ இல்லை
சிரிப்போ அழகோ
இல்லவே இல்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
தூக்கமும் இல்லை
துக்கமும் இல்லை
எதுவுமாய் இல்லை
ஏதுமாயுமில்லை
அனைத்தும் நீயே
என்பதோ அறவே இல்லை
நீ
என்ற நீ
எனக்கு
நீயாகவே
யாரென்று உன்னை
நான் கேட்கவேயில்லை
நீ
என்ற நீ
நீயாகவே
எனக்கு
நான் என்ற நானும்
நீயாகவே!!!