Tuesday, 14 August 2012

சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்

என்னில்
ஒரு பெருதுளியை
தனக்கென எடுத்துக்கொண்டாய்
உரிமையில்லாத போதும்
உன்னை
பறித்துக்கொண்டவள் நான்
ஒரு
கோவப்பெருந்தீயில்
சிவனாய் மாறி என்னை
சுட்டுப்பொசுக்கி
சாம்பலை இதயத்துக்கு பூசி
வெற்றியில் களித்தவன்
நீ
காதலை கேட்டேன்
சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்
என்றாய்
ஒர் எழுத்தில்
உன்
உறவை சொல்லி....!