Monday 23 April 2012

நிலா நிலா ஓடிவா!!

கலையும் மேகக்குவியலில்
ஒளிந்தும் ஓடியும்
விளையாடி கொண்டிருக்கிறாய் நீ

நட்சத்திரங்களை எண்ணி
தோற்றுக் கொண்டு இருக்கிறது
கனவுகள் பொய்யான 
பல ஜோடி கண்கள்

உன்னை எழுதி
கொண்டாடிக் கொண்டிருக்கிறது
கவி உலகம்

உன் ஒளி தாங்கி
மடி விரித்து பூமி.
.
உன்னை பிடித்து தருவதாய்
இன்னும் பொய் சொல்லி
சோறுட்டும் ஓரிரு அம்மாக்கள்

அதோ உன் அழகுக்கு
அவளை ஒப்பிட்டுக் கொண்டு மேலும் ஒருவன்

உன்னை விரட்டி
விடியத் துடிக்கும் சூரியன்

வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
வருந்தாத ”நிலவே”

இன்று என் ஜன்னலில்
எட்டிப்பார்க்க வருவாயா?

எங்கள் 
முதல் முத்தத்துக்கு சாட்சியாய்!!!