Tuesday 7 August 2012

கருணை!!




உனக்கும்
கரிசனம் இருக்கிறது என்பதை காட்ட
என்னை பற்றி நான்கு
வரிகள் மட்டுமே எழுத முடிந்த நீ
என்
பின்னால் நின்று
என்னை வேடிக்கை பார்
படம் எடு
கருணை சிந்து
முடிந்தால் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டு
பரிதாபப்பட்டு
உன்னை மனுஷியாய் காட்டிக்கொள்ளாதே
உனக்கெப்படி
தெரியும் நீ போன பின்
உன்னை போல் நான் ஏன் இருக்க கூடாது என்ற
கனவும் என் முதுகில் சுமையாகுமென்று!!!

No comments:

Post a Comment