Wednesday 25 July 2012

காதல் பிரம்மாக்கள்




அந்த பெருவிழியில் வீற்றிருக்கிறது
என் பிம்பம்
ஓய்யாரமாய்,ஆங்காரமாய் மிக அலட்சியமாயும்
என் பார்வையின் கரிசனத்தில் தான்
அவன் கடந்து கொண்டிருக்கிறான் பாதைகளை
நான் சேகரித்தும் நிராகரித்தும் கொண்டிருக்கிறேன்
அவன் பார்வைக்கான ஊடுறுவல்களை
அதை அப்படியே ஆமோதிக்க அவனும்
பழகிக்கொண்டிருக்கிறான்
இருவரின் பார்வைக்கும் பிடித்தவைகளை மட்டும்
நானும் அவனும் கவிதைகளாக்குவோம்
அனேக நேரங்களில் அவன் பார்வை
இழந்தவனாக இருக்கவே ப்ரியப்படுகிறான்
அவ்வேளைகளை நாங்கள் இரவுகளாக்கிக்கொள்கிறோம்
கனவுகளுக்கு இங்கு இடமில்லை
நாங்கள் சிற்பிகள், ஓவியர்கள், கவிஞர்கள், கதைச்சொல்லிகள்
எங்களுக்கானவைகளை தோற்றுவித்துக்கொண்டு
நாங்கள் கடவுள் ஆனோம்!!!

No comments:

Post a Comment