Saturday 28 July 2012

செந்நிற கணங்கள்


செந்நிற கணங்கள்
இருப்புக்கொள்ளாமல் நீ என் இருப்பில்
கொடுத்த அன்பையெல்லாம்
தவணை முறையில் ஈட்டிக்கொண்டு
இருக்கிறாய் தகிப்பு முறை கையாண்டு
இரவுகள் எடுக்கும் முடிவையெல்லாம்
கலைத்து போட்டு குளிர்க்காய்கிறது
அன்றாட விடியல்கள்
உன் கொடுங்கோலாட்சியில் ஏன் நான் மட்டும்
அடிமையாய்!!
நீ என் மன்னன் அல்லாத போதும்!!
இதோ நானும் தீயில் உருகி
என் மாமிசம் சதையாய் ஒழுகிக்கொண்டிருக்கிறது
குருதி மட்டும் தீயில் உறிஞ்சப்பட்டு
எலும்புகள் மட்டுமே மிஞ்ச
எடுத்து அணிந்துக்கொள்கிறாய் அதையும் மாலையாக்கி
எனக்கு இடுகாட்டானாயும்
நீ மட்டுமே இருக்க வேண்டுமென்ற
தீர்க்கத்தில்.....
பிடிமண் போடும் போது என் பேரை உச்சரிக்காதே
அடுத்த பிறவி எனக்கு உனக்காக வேண்டாம்!!!