Thursday 26 July 2012

செளக்கியங்கள்!!!


செளக்கியம் கேட்பவர்களிடம்
எப்படி சொல்வேன்
மிகச்சொற்பமே கைவசம் என்று
இனி யாரேனும் கேட்பாராயின்
உயிரை கேட்பதாய் உத்தேசித்துள்ளேன்
அசெளக்கியங்களை அறிவதே
ஒரு செளக்கியத்தின் உத்தேசம்
இழப்புகளின் பலனாய் பாடம் இது
எப்படி பார்த்தாலும் அவர்களை விட
நான் பரவாயில்லை தான்
என்னிடம் செளக்கியம் கேட்டு
தங்கள் அசெளகரியத்தை எனக்கு
விட்டுச்செல்ல உத்தேசித்துள்ள
உத்தேசம் எனக்கும் வெகு சமீபத்தில் தான் உரைத்தது
சமீபமாய் உன் அசெளக்கத்தை என்னிடம் காட்டிய நீ தான்
அனேகமாய் இந்த கவிதைக்கும் கதாநாயகன்!!!