Sunday 10 June 2012

நீ - 2

எத்தனை
குறுக்கு வழியும் பாயும்
ஒரு ஊடல்.
அத்தனை
சமாதானங்களையும்
தேடும்
பின் கூடலுக்காய்.


---------------


சின்ன
சின்ன அத்துமீறல்கள்
அடம் பிடித்து
ஓடும் குழந்தையின்
கால் தடங்களாய்..
கடிந்தவாறு
சிணுங்கலும் சிணுங்கியவாறு
இணக்கமும்
இரவு நேரத்து
இணக்கத்தின் குறியீடுகள்.


---------------


தூக்கம்
துறந்த இரவுகளில்
விழியில் வெளிச்சம் போட்டு கனவுகள்
நீர்க்குமிழி 
கனவுகள் உடையும் போது
கசியும் நீரை
கண்ணீர் என்கின்றனர்
என்னில்
உன்னை காணதவர்கள்.


------------------


எந்த
கவிதையும்
என்னுடையது அல்ல
அவை
நீ
தீண்டிய போது
உதிர்ந்த
முத்தங்கள்.


-------------


அது
உன் பெயராகத்தான்
இருக்கக்கூடும்
அதனால் தான்
நான் 
இத்தனை முறை எழுதுகிறேன்.


------