Sunday 10 June 2012

நீ.......3

வழியெங்கும்
நீ விதைத்து சென்ற
பார்வை
விளைந்து கிடக்கிறது
காதலாய்..


-----------


ஈரமற்ற
பார்வையில் என்ன விதைக்க?
தரிசாகவே கிடக்கட்டும்
காதலின்றி..


----------------


உள்ளங்கைகளில்
உன் முகத்தை ஏந்தி
நான் ரசிக்கையில்
நீ 
சிந்திய சில புன்னகைகள்
காதலா?
காணிக்கையா?


------------


உயிர்த்தும்
நீத்தும்
கண்ணீர்
வாசம் மாறாமல்
நீ வாசிக்க
மூடி வைத்த புத்தகம்...


----------------


அந்த
நானிலத்தில்
அவன்
பாலைவனம்
என் இதயத்தின் ஈரம் கூட 
அவனிடம்
வறண்டு விடுகிறது.


--------------


நீ
உறங்கிய பின்
என்னால் எழவே முடிவதில்லை
எழுத்தாய் கூட..


----------