Wednesday 13 June 2012

இழிவு காலமா?

அன்றொருவன்
காதலிக்க
அடுத்தொருவனை
மணமுடித்தனர்
இன்று
நானொருவனை காதலிக்க
ஈரமில்லாத பூமி
சொல்கிறது
இதென்ன இழிவு காலமென...

நான் யாரென்று
எனக்கே புரியாமல் போக
என்
எழுத்துக்களை
ஆணாக்கி அன்றாடம்
என்னை நானே
மானபங்கப்படுத்திக்கொள்கிறேன்...

எந்த புலவன் இனி
வரப்போகிறான்
என்னை
காவியமாய் படைக்க?

No comments:

Post a Comment