Monday 11 June 2012

வேடிக்கை

அவள்
கண்களில் அந்த காயம்
ஆறாமல் சீழ் வடிய

அவன்
கண்களில் மேலும் ஒரு மொட்டு
அரும்ப துடிக்கும் தயார் நிலையில்

அவர்கள்
கண்களில் இன்னும் சற்று அதிக பிரகாசம்
நிமிர்ந்து உட்கார்ந்து உட்கார்ந்து
இடை வலித்த பின்னும்
சுவாரஸ்யத்தின் முனைப்பில்

இப்படியாக
காலங்கள் கடக்க
நேற்று அன்றாகி
இன்று நேற்றாகி
நாளைக்காக காத்திருக்கு
அரசியல்
ஆன்மீகம்
சமூகம்
காதல்
விலைவாசி
தோல்வி
வெற்றி
கல்வி
கடன்
ஜெனம்
மரணம்
பாவ புண்ணியம்
குழந்தை சிரிப்பு
நோயின் வலி
தீவிரம் அடக்கா பசியோடு
நா........

No comments:

Post a Comment