Monday 11 June 2012

நீ.....6

தட்டு தடுமாறி
நீ
தவறி விழுவதை
பார்க்கும் போதெல்லாம்
வருத்தமாய் தான் உணர்கிறேன்
உன்
பார்வை பறித்த
குற்றவாளியாய்..
ஆனாலும் உனக்கும் ஓர் வாய்ப்பு
கொடுத்தேன்
மரணிக்கச்சொல்லி.

--------------

அன்னைக்கு ஒரு நாள்
அடுத்தொரு நாள்
பிறகொரு நாள்
முந்தின நாளுக்கு முன் நாள்
முந்தின நாள்
நேற்று
இன்று
அன்றாடம் நீ அனுப்பும்
அத்தனை புகைப்படத்திலும்
நீ மெருகேறி தான் இருக்கிறாய்
நான் தான் இன்னும்
நீயாகாமல்

“ தீ “ யாகி

---------------

எப்படியாவது
இன்றேனும் என் கவிதையில்
உன்னை நிறுத்த
எண்ணிக்கொண்டிருக்கையில்
எளிமையாய் எப்போதோ
என்னை
கடந்து சென்றுவிட்டிருக்கிறாய் நீ
எப்படி
இதில் யாருக்கு யார்
வேண்டாம்?

----------------